![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9H9tM-dN0buQG7UU_363y7QnV1b6OwKn8EHga1TwjUYm7yYGYHe3Rw_V1-c3vp8ZZU3wTt-6DcNH9lVhmnlr2WD0KZ9kUjQcLDI0Edmtg9oWjHQ1vyvE0vHATedSSlNqtsuRexbtihYs/s320/Sadgirl+copy.jpg)
உறங்கா விழிகள் விழித்திருக்க
மறக்கமுடியாமல்................
என்னுள்ளே சூறாவளி சுழன்றடிக்க
சுருட்டப்பட்ட பாய் போல் ................
வீட்டின் ஓரத்தே ஒதுங்குகிறேன் .
சொன்ன சொற்கள் இன்னும்
மனதின் ஓரத்தே இல்லை
மனதின் அணுவெல்லாம்
நீக்கமற
நிறைந்து வலி செய்கிறது.
உண்மை உணர்வின்றி
இவர் பேசும் வார்த்தைகள்
உடன் மறையா.......................
காதுகளால் சேகரித்து ..................உள்ளம்
எனும் நெசவுத்தறியில் மீண்டும் மீண்டும்
நெய்யப்படும்............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக