![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6GXj6a25ODFPt7OS0RpXzcJoqOdBuiSdsQdk7gw-RoXuZUsDVd_wC7L38vDJpk3nwK49g8EhwWXuJSoc0S5A61GVyCrWQJ-tFSYLoeIxju1xjxecUBPvi155WvRUNY4nlyLgJA_OcdYU/s320/oasisnoelgallagherpoparnr9.jpg)
கொலைகள் நிறை பயங்கரம்
என் மனதில் கொடூரம் .........
நாளுக்கு நாள் என்னை நானே
கொன்று புதியவன் ஆக
முயல்கின்றேன் ..........இயல்புகள்
இங்கு இல்லை ..............................
மாற்றி மாற்றி உணர்வுகள்
பச்சோந்தியை போல
நிறம் மாறி ,விம்மலையும் விசும்பலையும்
புதைத்து எதையும் தாங்குபவனாக
பாவனை செய்து ....................
மனதின் உணர்வில் கூட கலப்படம்
என்ன செய்ய ?
வேடதாரியை போல நடிகனை போல
ஆகி இயல்பை கொன்று
புதியவனாகதான் இந்த எத்தனிப்பு ..................................