திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மனதின் உள்ளே



உறங்கா விழிகள் விழித்திருக்க

மறக்கமுடியாமல்................

என்னுள்ளே சூறாவளி சுழன்றடிக்க

சுருட்டப்பட்ட பாய் போல் ................

வீட்டின் ஓரத்தே ஒதுங்குகிறேன் .


சொன்ன சொற்கள் இன்னும்

மனதின் ஓரத்தே இல்லை

மனதின் அணுவெல்லாம்

நீக்கமற

நிறைந்து வலி செய்கிறது.


உண்மை உணர்வின்றி

இவர் பேசும் வார்த்தைகள்

உடன் மறையா.......................

காதுகளால் சேகரித்து ..................உள்ளம்

எனும் நெசவுத்தறியில் மீண்டும் மீண்டும்

நெய்யப்படும்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக