வியாழன், 5 நவம்பர், 2009

பெரியவனாக சின்னவன் .............


அண்டவெளியை ஏக்கமுடன்
அண்ணார்ந்து பார்த்து
நாளை பற்றிய கனவில்
அவனை அவனே மறந்து .....................

சின்னவனின் ஞாபகங்கள்
சிட்டுக்குருவி போல
சிறகடித்து மனமெங்கும்
சின்ன ஒரு வலி பிறக்கும்


பிஞ்சு கரம் பற்றி
பிள்ளை நடை பழக்கி
உள்ளம் உவகையுற
உளமும் ஏக்கமுறும்


நெற்றியை வருடி
நெஞ்சை நீவி
முக்குப் பிடித்து
இதழ்கள் பதித்து
மழலை கேட்டு
இதயம் கொடுத்து
இதயம் வாங்கி
சிரிப்பில் மயங்கி
உதைகள் வாங்கி
அழுகையில் துடித்து .......................
பிரிதல் இங்கு
கொடுமை ................
நாளை மகனை காண
மண்ணில் மிதிக்கையில்
பெரியவனாக இவன்
சின்னவன்.



இழத்தல்,
ஆசைகள் எல்லாம்
மனதுள் கிளர்ந்தெழ
பயணம் ...................பயண முடிவில்
மழலை தொலையும்
பெரியவனாக சின்னவன் ......................













செவ்வாய், 3 நவம்பர், 2009

பூச்சரம்

யதார்த்தம்


நரைத்த நாட்களின் மத்தியில்
நகரல் மட்டும் நிரந்தரமாய்
உடைந்த மண் சட்டிகளும்
பானைகளும் முன்னைய உருவம்
பெற முயன்று தவமியற்றி ................
மண்ணோடு மண்ணாகல்
கனவை நனவுகளில் சுமந்து ..........ஏக்கங்களில்
நனைந்து.................
முழ்கி .........திணறி ............
மீண்டும் மீண்டும் சடலமாய் நீரில் மிதந்து ........


சூளையில் சுட்ட சட்டி
வலி தாங்கிக் கொண்டது
உரமாதலால் ..........ஆனால்.......
உரமான பின்னும்
தீ மேல் வழ்க்கை
உடல் தீ மேல் தகித்தல்உளமும் கூட,
கொதி நீரில் அவிந்து
சிவந்த உரு தீ மூட்டலால்
சிதைந்து கருமை உரு கொண்டு
நரைத்த நாட்களின் மத்தியில்
நகரல் மட்டும் நிரந்தரமாய்